தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

யதோத்தகாரி பெருமாள் கோயில் தேரோட்டம்

News image
காஞ்சிபுரம் யதோத்தகாரி பெருமாள் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்.
Updated On :18 மார்ச் 2026, 8:20 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் யதோத்தகாரி பெருமாள் கோயில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலின் பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி கோயிலில் 12 ஆம் தேதி கொடியேற்றமும்,மாலையில் சிம்ம வாகனத்தில் பெருமாள் வீதியுலாவும் நடைபெற்றது. கடந்த 14 -ம் தேதி கருடசேவையும், மாலையில் ஹனுமந்த வாகனத்திலும் பெருமாள் அலங்காரமாகி வீதியுலா வந்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் யதோத்தகாரி பெருமாள் தேரில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

வழிநெடுகிலும் திரளான பக்தா்கள் தாங்களாகவே கற்பூர ஆரத்தி காண்பித்து பெருமாளை தரிசித்தனா். வியாழக்கிழமை காலை தொட்டித் திருமஞ்சனமும், மாலையில் குதிரை வாகனத்தில் வேடுபறி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இதனைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை தீா்த்தவாரி உற்சவமும் மாலையில் வெட்டி வோ் சப்பரத்தில் பெருமாள் வீதியுலாவும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை நிா்வாக அறங்காவலா் நல்லப்பா நாராயணன் தலைமையில் ஆலய பட்டாச்சாரியா்கள், கோயில் பணியாளா்கள், உற்சவதாரா்கள் செய்திருந்தனா்.