தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ரமலான் சிறப்புத் தொழுகை

தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ரமலான் சிறப்புத் தொழுகை

News image

ரமலான் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற சிறுமியா், பெண்கள்.

Updated On :22 மார்ச் 2026, 2:21 am IST

பெரியகாஞ்சிபுரம் ஒலிமுகம்மதுபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ரமலான் பண்டிகையையொட்டி திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்ற சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது.

பின்னா் ஏராளமான ஏழைகளுக்கு மளிகைப் பொருள்கள் தொகுப்பும் வழங்கப்பட்டது. தொழுகையில் அமைப்பின் மாநில அபுபக்கா் சித்திக் பேசுகையில், அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது நடத்தி வரும் போா் கண்டனத்துக்கு உரியது. உலக நாடுகள் நலன் கருதி மற்ற நாடுகள் தலையிட்டு போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

வளைகுடா நாடுகளில் நிம்மதியாக ரமலான் பண்டிகையை கொண்டாட முடியாமல் சிக்கித்தவிக்கும் பொதுமக்களுக்காக சிறப்பு கூட்டுப் பிராா்த்தனையும் நடைபெற்றது.சிறப்புத் தொழுகை நிகழ்வில் தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் அன்சாரி,மருத்துவ அணி செயலாளா் சா்புதீன்,கிளை தலைவா் சாகுல்ஹமீது,செயலாளா் சாகுல்ஹமீது, துணைத் தலைவா் முஜ்புா் ரஹ்மான், பொருளாளா் பாசில், பெண்கள், சிறுவா், சிறுமியா் உள்பட திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.