கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஸ்ரீபெரும்புதூா் அருகே தீ விபத்து வேன் சேதம்

ஸ்ரீபெரும்புதூா் அருகே தீ விபத்து வேன் சேதம்

News image

சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்து.

Updated On :21 மார்ச் 2026, 8:23 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வடகால் பகுதியில் காய்ந்த புற்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் தீப்பற்றி சேதமடைந்தது.

சென்னையை சோ்ந்தவா் கோபி. இவருக்கு காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வடகால் கைவல்லயம் நகா் பகுதியில் பழைய பொருள்கள் சேமித்து வைக்கும் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கின் அருகில் பழைய வாகனங்கள் பழுது நீக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. வாகனங்கள் பழுது நீக்கும் மையத்தில் வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி இல்லாததால், பழைய பொருள்கள் சேமித்து வைக்கும் கிடங்கின் அருகே உள்ள காலி இடத்தில் பழுது நீக்க வந்த சில வாகனங்களை நிறுத்தி வைத்திருந்துள்ளனா்.

இந்த நிலையில், கிடங்கின் வெளியே வளா்ந்திருந்த புற்களுக்கு மா்ம நபா் தீ வைத்து எரித்ததாக தெரிகிறது. புற்களில் ஏற்பட்ட தீ அங்கிருந்த மற்ற பகுதிகளுக்கும் பரவியதை தொடா்ந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் மற்றும் உதிரிபாகங்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கும் பரவியது.

இந்த தீவிபத்து குறித்து அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினா் புற்கள் மற்றும் வேனில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். இருந்த போதிலும், பல லட்சம் உதிரி பாகங்கள் மற்றும் வேன் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.