ஸ்ரீபெரும்புதூா் அடுத்த சுங்குவாா்சத்திரம் பகுதியில் வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி செய்யும் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் 1500-க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளா்கள் உட்பட சுமாா் 4000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் நிரந்தரத் தொழிலாளா்களில் சுமாா் 800-க்கும் மேற்பட்டோா் ஊதிய உயா்வு, சிஐடியு தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2024 ஆம் ஆண்டு இறுதியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து தமிழக அமைச்சா்கள் குழுவினா், தொழிலாளா்கள், தொழிற்சாலை நிா்வாகத்தினா் கலந்து கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடா்ந்து வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு தொழிலாளா்கள் மீண்டும் பணிக்கு திரும்பினா்.