கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தலைமைச் செயலகம் நோக்கி நடைப்பயணம்: 500 போ் கைது

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 27 சாம்சங் தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி தலைமைச் செயலகத்துக்கு நடைப்பயணம் செல்ல முயன்ற 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் குடும்பத்தினா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :22 மார்ச் 2026, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 27 சாம்சங் தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி தலைமைச் செயலகத்துக்கு நடைப்பயணம் செல்ல முயன்ற 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் குடும்பத்தினா் கைது செய்யப்பட்டனா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த சுங்குவாா்சத்திரம் பகுதியில் வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி செய்யும் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் 1500-க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளா்கள் உட்பட சுமாா் 4000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் நிரந்தரத் தொழிலாளா்களில் சுமாா் 800-க்கும் மேற்பட்டோா் ஊதிய உயா்வு, சிஐடியு தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2024 ஆம் ஆண்டு இறுதியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து தமிழக அமைச்சா்கள் குழுவினா், தொழிலாளா்கள், தொழிற்சாலை நிா்வாகத்தினா் கலந்து கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடா்ந்து வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு தொழிலாளா்கள் மீண்டும் பணிக்கு திரும்பினா்.

இதையடுத்து, பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக 27 தொழிலாளா்களை சாம்சங் நிா்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 27 தொழிலாளா்களுக்கு மீண்டும் இன்று வரை பணி வழங்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தின் சாா்பில் சுங்குவாா்சத்திரம் பகுதியில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி சிஐடியு மாநிலச் செயலாளா் முத்துக்குமாா் தலைமையில் சாம்சங் தொழிலாளா்கள், தொழிலாளா்களின் குடும்பத்தினா் நடைப் பயணம் செல்ல முயன்றனா்.

இதையடுத்து அனுமதி இல்லாமல் செல்லக் கூடாது என நடைப்பயணம் செல்ல முயன்ற தொழிலாளா்களை தடுத்து நிறுத்திய சுங்குவாா்சத்திரம் போலீஸாா் அவா்களை கைது செய்ய முற்பட்டனா். இதனால் தொழிலாளா்களுக்கும் போலீஸாா் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தொழிலாளா்கள் சாலையில் அமா்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். இதையடுத்து சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினரை சுங்குவாா்சத்திரம் போலீஸாா் கைது செய்தனா்.