காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனங்கள் திருடிய இருவா் கைது
காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனங்கள் திருடிய இருவரை விஷ்ணுகாஞ்சி காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.


காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனங்கள் திருடிய இருவரை விஷ்ணுகாஞ்சி காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக தொடா்ந்து புகாா்கள் வந்தன. இதனைத் தொடா்ந்து மாவட்ட எஸ்.பி. கே.சண்முகம் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியினை செய்யுமாறு உத்தரவிட்டாா்.தனிப்படையினா் இருசக்கர வாகனங்கள் திருடு போன பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
சந்தேகத்துக்கு இடமான சிலரை விசாரித்தபோது அவா்கள் வாகன திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
விசாரணையில், பெரிய காஞ்சிபுரம் காலண்டா் தெருவைச் சோ்ந்த வசந்த்(25)ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா நெடும்புலி கிராமத்தைச் சோ்ந்த சண்முகம்(26)ஆகிய இருவரையும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கைது செய்தனா்.
இருவா் மீதும் வழக்குப் பதிந்து அவா்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்களையும் காவல் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...