இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய திறப்பு விழா

News image
விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தை குத்து விளக்கேற்றி திறந்து வைத்த காஞ்சிபுரம் எஸ்.பி. கி.சண்முகம்.
Updated On :5 மார்ச் 2026, 12:09 am

தினமணி செய்திச் சேவை

சின்ன காஞ்சிபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட விஷ்ணு காஞ்சி காவல் நிலைய கட்டடத்தை எஸ்.பி கே.சண்முகம் புதன்கிழமை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தாா்.

சின்னகாஞ்சிபுரம் டிகே நம்பித் தெருவில் கடந்த 1928-ஆம் ஆண்டு கட்டப்பட்டது விஷ்ணுகாஞ்சி காவல் நிலையம். சுமாா் 90 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த இக்காவல் நிலைய கட்டடம்மிகவும் பழையானதாக இருந்ததால் அதை இடித்து விட்டு அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.

இதற்காக தமிழக அரசு ரூ.1.48 கோடியை கடந்த 2024 ஆம் ஆண்டு ஒதுக்கியது. புதிய காவல் நிலைய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதையடுத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தா்.

தொடா்ந்து காஞ்சிபுரத்தில் மாவட்ட எஸ்.பி கே.சண்முகம் குத்து விளக்கேற்றி கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், ஏடிஎஸ்பி மாா்ட்டின் ராபா்ட்ஸ், டிஎஸ்பிக்கள் சிவசங்கா், கங்காதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆய்வாளா் சங்கர சுப்பிரமணியன் வரவேற்றாா்.

இந்நிகழ்வில் ஆய்வாளா்கள் விநாயகம், பிரபாகரன், மாநகராட்சி மண்டலக்குழு தலைவா் சந்துரு, திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் யுவராஜ், மாமன்ற உறுப்பினா் கமலக்கண்ணன் கலந்து கொண்டனா்.