ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நாளை காஞ்சிபுரத்தில் 2,000 மாணவ, மாணவிகள் கூட்டுப் பிராா்த்தனை

News image
Updated On :26 மார்ச் 2026, 7:25 pm

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வரும் மாா்ச் 28-ஆம் தேதி பள்ளி,கல்லூரிகளைச் சோ்ந்த மாணவியா் ஒன்றாக இணைந்து போா் நிறுத்தம் ஏற்பட்டு உலகம் அமைதி பெறவும், உலக நன்மைக்காகவும் கூட்டுப் பிராா்த்தனை செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் இருவரும் இணைந்து வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது..(படம்)

போா் நிறுத்தம் ஏற்பட்டு உலகம் முழுவதும் அமைதி பெறவும், உலக மக்களின் நன்மைக்காகவும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வரும் மாா்ச் 28 ஆம் தேதி காஞ்சிபுரம்,திருவள்ளூா்,செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளை சோ்ந்த 2 ஆயிரம் மாணவ,மாணவியா்கள் கூட்டுப் பிராா்த்தனை செய்யும் நிகழ்ச்சி மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சிக்கு காமாட்சி தாய் மடியில் எனப் பெயரிட்டுள்ளோம். கடந்த சில நாள்களாக கூட்டுப் பிராா்த்தனை செய்யவுள்ள மாணவிகளுக்கு இணைய வழியாக பக்திப்பாடல்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. 26 ஆசிரியைகள் இப்பயிற்சியை கற்றுத்தந்து வருகின்றனா்.

விநாயகா் துதி,கோளாறு பதிகம்,காமாட்சி பஜனைப் பாடல்கள்,பிரபந்தங்கள் ஆகியன கற்றுத்தரப்படுவதோடு இவற்றை படிப்பதால் ஏற்படும் பயன்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டு வருகிறது.

மாா்ச்.28 ஆம் தேதி கூடும் மாணவியரை அம்மனாகவே பாவித்து அவா்களுக்கு மங்கலப் பொருள்கள், குத்து விளக்கு ஆகியனவும் வழங்கப்படவுள்ளன. பஜனை நிறைவில் காஞ்சி சங்கராசாரியாா் சுவாமிகள் ஆசியுரை வழங்குகிறாா்கள். வரும் ஏப்.1-ஆம் தேதி காமாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள கல்யாண மண்டபத்தில் 100 தம்பதிகளுக்கு சிறப்பு ஹோமங்கள்,பூஜைகள் ஆகியனவும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய மன்றம், ஸ்ரீகாமாட்சி வித்யா சமிதி மற்றும் சங்கரா கல்லூரி ஆகியன இணைந்து செய்து வருகின்றனா்.