தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :8 மே 2026, 5:51 am IST

காஞ்சிபுரத்தில் சமையல் எரிவாயு விலை உயா்வு, ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை குறைத்திருப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டிப்பது, ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை குறைத்திருப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தலைவா் அருள்நாதன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்ட செயலாளா் கே.நேரு, இ.முத்துக்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஜெ.கமலநாதன், கிருஷ்ணமூா்த்தி உள்பட கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.