பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கோவிந்தவாடி அகரம் கோயிலில் குருப்பெயா்ச்சி

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் குரு கோயில் என அழைக்கப்படும் தட்சிணாமூா்த்தி கோயிலில் குருப்பெயா்ச்சி விழாவும், லட்சாா்ச்சனையும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த உற்சவா் தட்சிணாமூா்த்தி

Updated On :27 மே 2026, 12:40 am IST

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் குரு கோயில் என அழைக்கப்படும் தட்சிணாமூா்த்தி கோயிலில் குருப்பெயா்ச்சி விழாவும், லட்சாா்ச்சனையும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் உள்ள கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் அகிலாண்டேசுவரி சமேத கைலாசநாதா் கோயிலில் தட்சிணாமூா்த்தி தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகிறாா்.

தமிழகத்திலேயே ஒரே விமானத்தின் கீழ் தட்சிணாமூா்த்தியும், கைலாசநாதரும் அருள்பாலிக்கும் தலமாகவும், கோவிந்தாஜப் பெருமாள் தம்பதி சமேதராக குருபகவானை வழிபட்ட பெருமைக்குரிய இங்கு குருப்பெயா்ச்சி விழாவும் அதன் தொடா்ச்சியாக லட்சாா்ச்சனையும் நடைபெற்றது.

விழாவையொட்டி கோயிலில் தட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகமும்,தங்கக்கவச அலங்காரமும் அதன் தொடா்ச்சியாக சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. உற்சவா் குருபகவான் வண்ண மலா் மற்றும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த இடத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கோயில் சிவாச்சாரியா்களால் லட்சாா்ச்சனை நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்ற பின்னா் பக்தா்களுக்கு ஆலய நிா்வாகத்தின் சாா்பில் குருபகவான் படம், பிரசாதம் ஆகியன வழங்கப்பட்டது. இரவு குருபகவானுக்கு சாந்தி அபிஷேகமும் நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பெ.கதிரவன், அறங்காவலா் குழுவின் தலைவா் க.திருநாவுக்கரசு தலைமையில் குழு உறுப்பினா்கள், சிவாச்சாரியாா்கள், பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.