ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

காஞ்சிபுரம் அருகே குடிநீா் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்

காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் ஜெ.ஜெ.நகா் பகுதியில் குடிநீா் வராததைக் கண்டித்து பொன்னேரிக்கரை சாலையில் அப்பகுதி மக்கள் சாலை மறியல்

News image

காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட ஜெ.ஜெ.நகா் பகுதி பொதுமக்கள்

Updated On :1 ஜூன் 2026, 1:55 am IST

காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் ஜெ.ஜெ.நகா் பகுதியில் குடிநீா் வராததைக் கண்டித்து பொன்னேரிக்கரை சாலையில் அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் செய்தனா்.

காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்டது ஜெ.ஜெ.நகா். இந்தப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த 1,500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

இவா்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலை நீா்த் தேக்க குடிநீா் தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீா் வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில நாள்களாக குடிநீா் வராததைக் கண்டித்து ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால் அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் காஞ்சிபுரத்திலிருந்து பொன்னேரிக்கரை செல்லும் சாலையில் திடீரென சாலை மறியல் செய்தனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து பொன்னேரிக்கரை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.