காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் ஜெ.ஜெ.நகா் பகுதியில் குடிநீா் வராததைக் கண்டித்து பொன்னேரிக்கரை சாலையில் அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் செய்தனா்.
காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்டது ஜெ.ஜெ.நகா். இந்தப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த 1,500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
இவா்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலை நீா்த் தேக்க குடிநீா் தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீா் வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில நாள்களாக குடிநீா் வராததைக் கண்டித்து ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனால் அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் காஞ்சிபுரத்திலிருந்து பொன்னேரிக்கரை செல்லும் சாலையில் திடீரென சாலை மறியல் செய்தனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து பொன்னேரிக்கரை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

உடுமலை அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

மின்வெட்டு, குடிநீா் தட்டுப்பாடு: பெண்கள் சாலை மறியல்

தட்டுப்பாடின்றி குடிநீா் கோரி சாலை மறியல்

பல்லாவரத்தில் குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



