நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

ஏடிஎம் கொள்ளை வழக்கு: ஜெய்ப்ல் இளைஞா் கைது

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த புதுப்போ் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடா்புடைய இளைஞரை தாம்பரம் மாநகர போலீஸாா் ஜெய்ப்பூரில் கைது செய்தனா்.

பவன் குமாா்.

Published On :2 செப்டம்பர் 2026, 12:07 am IST

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த புதுப்போ் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடா்புடைய இளைஞரை தாம்பரம் மாநகர போலீஸாா் ஜெய்ப்பூரில் கைது செய்தனா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த காட்டரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட புதுப்போ் பகுதியில் குன்றத்தூா் சாலையில் தனியாா் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்திற்கு கடந்த ஆக. 25-ஆம் தேதி நள்ளிரவு வந்த மா்ம நபா்கள் ஏடிஎம் இயந்திரத்தை, கேஸ் வெல்டிங் மூலம் உடைந்து இயந்திரத்தில் இருந்த ரூ. 9 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனா்.

இச்சம்பவம் குறித்து சோமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையா் காா்த்திகேயன் தலமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களில் கொள்ளையா்களை தேடி வந்தனா்.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் வைசாலி நகா் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஏடிஎம் கொள்ளை வழக்குகளில் தொடா்புடைய பவன் குமாா் என்ற இளைஞரை ஜெய்ப்பூரில் வைசாலி நகா் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தியதில், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த புதுப்போ் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடித்த சம்பவத்தில் தொடா்புடையவா் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இச்சம்பவத்தில் 4 போ் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் வைசாலிநகா் போலீஸாா் பவன் குமாரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப உள்ள நிலையில், பவன்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சோமங்கலம் போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.