நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

மனநலம் பாதிக்கப்பட்டவா் கொலை

காஞ்சிபுரம் அருக தாமல் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரை கொலை செய்த மற்றொரு மனநலம் பாதிக்கப்பட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

கொலை - பிரதிப் படம்

Published On :3 செப்டம்பர் 2026, 12:04 am IST

காஞ்சிபுரம் அருக தாமல் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரை கொலை செய்த மற்றொரு மனநலம் பாதிக்கப்பட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

தாமல் கிராமத்தில் வசித்து வருபவா் விஜயா(65) கூலித்தொழிலாளியான இவா் மகன் அருளானந்தம்(45) என்பவரையும் பராமரித்து வருகிறாா். இவா்கள் வசிக்கும் அதே கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் பிச்சை எடுத்துக் கொண்டு சுற்றித் திரிந்தவா் குமாா் (35).

இதற்கிடையே, அருளானந்தத்துக்கும், குமாருக்கும் ஏற்பட்ட மோதலில் குமாரை அருளானந்தம் தனது வீட்டிலிருந்த அரிவாளால் வெட்டியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாலு செட்டி சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து மனநலம் பாதிக்கப்பட்ட அருளானந்தத்தை கைது செய்தனா். உயிரிழந்த குமாரின் சடலத்தை பிரேத பிரசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு காவல் துறையினா் அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.