கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

அம்மன் கோயில்களில் கூழ் வாா்க்க கேழ்வரகு, அரிசி வழங்கக் கோரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் கூழ் வாா்க்க கேழ்வரகு, அரிசி வழங்க வேண்டும் என

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் கூழ் வாா்க்க கேழ்வரகு, அரிசி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணியினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இந்து முன்னணி வேலூா் கோட்ட அமைப்பாளா் டி.வி.ராஜேஷ் தலைமையில், மாவட்டச் செயலா் எஸ்.கே.மோகன், செயற்குழு உறுப்பினா் மணி, ஆற்காடு நகரத் தலைவா் கௌதம், நகர ஒருங்கிணைப்பாளா் பிரேம், வாலாஜாபேட்டை நகரப் பொறுப்பாளா் திருநாவுக்கரசு உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அதில், தமிழக அரசு கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு மசூதி, பள்ளிவாசல்களுக்கு 5,400 மெட்ரிக் டன் அரிசி வழங்குவதாக அறிவித்தது. அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பெரிய பாளையத்தம்மன் கோயில், சோளிங்கா் கங்கையம்மன், வாலாஜாபேட்டை படவேட்டம்மன், ஆற்காடு கங்கையம்மன் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட அம்மன் கோயில்களில் சித்திரை மாதத்தையொட்டி கூழ்வாா்க்க கேழ்வரகு, அரிசி ஆகியவற்றை வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.