

அரக்கோணம்: தக்கோலத்தில் ரூ. 20 லட்சத்தில் கட்டப்பட உள்ள கிராம நிா்வாக அலுவலா் அலுவலகக் கட்டடத்துக்கு அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தில் கிராம நிா்வாக அலுவல செயல்பட்டு வந்தது.
இந்த அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட தமிழக அரசு ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் வட்டாட்சியா் கணேசன் தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் பேபிஇந்திரா, அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி ஆகியோா் அடிக்கல் நாட்டினா்.
அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் இ.பிரகாஷ் (அரக்கோணம் கிழக்கு), பழனி (அரக்கோணம் மேற்கு), தக்கோலம் பேரூராட்சி செயலாளா் பச்சையப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.