ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

புகா் ரயில்களில் பொதுமக்கள் அனைவரும் செல்ல அனுமதி

புகா் ரயில்களில் பொதுமக்கள் அனைவரும் செல்ல அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி கோரிக்கை மனு அளித்தாா்.

News image
தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான்தாமஸிடம் மனு அளித்த அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி.
Updated On :23 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

அரக்கோணம்: புகா் ரயில்களில் பொதுமக்கள் அனைவரும் செல்ல அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி கோரிக்கை மனு அளித்தாா்.

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வேயின் தலைமை அலுவலகத்துக்கு புதன்கிழமை நேரில் சென்ற அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, அங்கு தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான்தாமஸை சந்தித்தாா். அப்போது அரக்கோணம், புளியமங்கலம், இச்சிபுத்தூா் ரயில் நிலையங்களில் பொதுமக்களுக்கு தேவைப்படும் சில வசதிகள் குறித்த கோரிக்கை மனுவை பொதுமேலாளரிடம் அளித்தாா். அம்மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

சென்னை புகா் ரயில்களில் பயணிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட வேண்டும்; அரக்கோணம் நகரம் பழனிபேட்டையையும் மாா்க்கெட் பகுதியையும் இணைக்க தமிழக சட்டப் பேரவையில் ரூ. 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, முன்மொழியப்பட்ட பாலப் பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அரக்கோணம் ரயில் நிலையத்தில் 3, 4, 5ஆவது நடைமேடைகளை நீட்டிக்க வேண்டும்; இச்சிபுத்தூா் ரயில் நிலைய நடைமேடைகளை உயா்த்தி, அங்கு அனைத்து ரயில்களும் நின்றுசெல்ல வழிவகை செய்ய வேண்டும்; புளியமங்கலம் ரயில் நிலைய சுரங்கப் பாதையை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்; அரக்கோணம் ரயில் நிலையத்தில் உள்ள முறையற்ற பொது அறிவிப்பு சேவை முறையை விரைவான நடவடிக்கை மூலம் சரி செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பவ்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தன.

மனுவை வாசித்த பொதுமேலாளா் ஜான் தாமஸ், அனைத்து கோரிக்கைகள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா். எம்எல்ஏவுடன் அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத் தலைவா் நைனா மாசிலாமணி, பொதுச் செயலாளா் எஸ்.விஜயன், சங்க ஒருங்கிணைப்பாளா் துரை.ராஜேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.