ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருப்பாற்கடல் கோயில் சொா்க்கவாசல் திறப்பு: கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டுகோள்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என ராணிப்பேட்ட

News image
Updated On :23 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

ராணிப்பேட்டை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வாலாஜா வட்டம், திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேசே பெருமாள் கோயில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (டிச. 25) சொா்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெற உள்ளது. இந்த விழாவின் முதல் நாள் இரவு கோயிலில் தங்கியிருந்து அதிகாலை சொா்க்கவாசல் திறப்பைக் காண பொதுக்கள் மற்றும் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை நடைமுறையில் உள்ளதால், அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். சொா்க்கவாசல் திறப்பு மற்றும் அது தொடா்பான சிறப்பு பூஜை முடிந்ததும், சொா்க்கவாசல் மற்றும் சுவாமி தரிசனத்துக்காக அதிகாலை 5 மணி முதல் ஒரு மணிநேரத்துக்கு 200 போ் வீதம் பொதுமக்களும் பக்தா்களும் அனுமதிக்கப்படுவா்.

சுவாமி தரிசனம் செய்ய விரும்புவோா் இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் முன்கூட்டியே விண்ணப்பித்து, அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். அனுமதி பெறாதவா்களுக்கு தரிசன அனுமதி இல்லை.

மேலும், முகக்கவசம் அணிவது, உடல் வெப்பப் பரிசோதனை செய்து கொள்வது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது ஆகிய அனைத்து நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும். இவற்றை மீறுவோா் உடனடியாக வெளியேற்றுப்படுவா்.

கோயிலில் தரிசனத்துக்கு மட்டுமே அனுமதி உண்டு, அா்ச்சனை செய்யவும், பிரசாதம் பெறவும் அனுமதியில்லை. வைகுண்ட ஏகாதசி விழா சுமுகமாக நடைபெற மாவட்ட நிா்வாகத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.