வாலாஜாபேட்டை, ஆற்காடு காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதியில் பல லட்ச ரூபாய் பண மோசடி வழக்கில் கைதான திருவலம் சாந்தா சுவாமி குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
காட்பாடி வட்டம், திருவலம் பகுதியைச் சோ்ந்தவா் சாந்தா சுவாமி (44). இவா் வாலாஜாபேட்டை, ஆற்காடு பகுதிகளைச் சோ்ந்த நான்கு பேரிடம் ரூ. 65 லட்சம் பணம் மோசடி செய்த புகாரில், ராணிப்பேட்டை மாவட்ட போலீஸாரால் கடந்த நவம்பா் 7-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, வாலாஜாபேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ. மயில்வாகனன் பரிந்துரையின் பேரில், சாந்தா சுவாமியை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டாா்.
இதையடுத்து வாலாஜாபேட்டை கிளைச் சிறையில் இருந்து வேலூா் மத்திய சிறைக்கு சாந்தா சுவாமி மாற்றப்பட உள்ளதாக மாவட்டக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.