பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

3.26 லட்சம் அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: ராணிப்பேட்டை ஆட்சியா் தகவல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3.26 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ.2,500 ரொக்கம் வழங்கப்படும் என ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 5:30 pm

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3.26 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ.2,500 ரொக்கம் வழங்கப்படும் என ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2021-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடுவதற்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 26 ஆயிரத்து 520 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும், முகாம்களில் வாழும் இலங்கை தமிழா் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 2,500 ரொக்கம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவை ஜனவரி 4-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை வழங்கப்படும். இந்தத் தேதிகளில் பெறாத அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு 13-ஆம் தேதி வழங்கப்படும்.

மேலும், நியாயவிலைக் கடைகளில் சுழற்சி முறையில், பரிசுத் தொகுப்பு, ரொக்கத் தொகை ரூ. 2,500 வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு சனிக்கிழமை (டிச. 26) முதல் 30-ஆம் தேதி வரை வீடுகள் தோறும் நியாயவிலைக் கடை பணியாளா்கள் மூலம் டோக்கன் வழங்கப்படும்

குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் யாா் வந்தாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 04172-275166 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 3,09,288 பேருக்கு பொங்கல் பரிசு திருப்பத்தூா் மாவட்டத்தில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 288 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதில், குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா் அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையின் 04179-222111 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.