காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராணிப்பேட்டை அருகே வனவிலங்கு வேட்டையாட வைத்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பசு மாடு படுகாயம்

ராணிப்பேட்டை அருகே வனவிலங்கு வேட்டையாட மாங்கொட்டையில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து மேய்ச்சலுக்கு சென்ற சினை பசு மாடு படுகாயமடைந்தது

News image
Updated On :15 மே 2020, 1:11 pm

DIN

ராணிப்பேட்டை அருகே வனவிலங்கு வேட்டையாட மாங்கொட்டையில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து மேய்ச்சலுக்கு சென்ற சினை பசு மாடு படுகாயமடைந்தது. இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை அடுத்த சீக்கராஜபுரம் மோட்டூர் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் விவசாயி நரசிம்மன், இவருக்கு சொந்தமான 5 மாதம் சினையாக உள்ள பசு சீக்கரஜபுரம் பெரிய ஏரியில் வெள்ளிக்கிழமை காலை புல் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது பசு மாட்டின் அருகே திடீரென பலத்த சத்தத்துடன் வெடிசத்தம்  கேட்டு அக்கம்  பக்கத்தினர்  ஓடி சென்று  பார்த்துள்ளனர். அப்போது பசு மாட்டின் கீழ் தாடை கிழந்து தொங்கி ரத்தம் வெளியேறிபடி பசு அலறியடித்து துடித்துள்ளது.

இது குறித்து உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக்கு தகவல் அளித்துள்ளனர். அவர் சிப்காட் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சிப்காட் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று  விசாரணை நடத்தினர். அவர்களது விசாரணையில் மர்ம நபர்கள் காட்டுப் பன்றி, மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாட மாங்கொட்டையில் நாட்டு வெடிகுண்டு மறைத்து வைத்திருந்ததும், அங்கு மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடு தெரியாமல் கடித்ததால் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து புளியங்கண்ணு அரசு கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு படுகாமடைந்த பசு மாட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நாட்டு வெடிகுண்டை மாங்கொட்டையில் மறைத்து வைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.