கிசான் திட்ட முறைகேடு: ஆற்காடு உதவி வேளாண்மை அலுவலர் கைது
ஆற்காட்டில் பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு வழக்கில் உதவி வேளாண்மை அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஆற்காட்டில் பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு வழக்கில் உதவி வேளாண்மை அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் சார்பில் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் மூன்று தவணைகளாக தலா 2000 வீதம் ரூபாய் 6000 பிரதமரின் கிசான் திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தில் விவசாய அல்லாதோர் பதிவு செய்து முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முறைகேட்டில் பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி வேளாண்மை உதவி அலுவலகத்தில் உதவி அலுவலராக பணியாற்றி வந்த ராஜசேகரன் என்பவரை வேலூர் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...