தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

ஆற்காடு அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம், கபசுர குடிநீா் விநியோகம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 6:25 pm

DIN

ஆற்காடு அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம், கபசுர குடிநீா் விநியோகம் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் ஏ.வி.டி. பாலா தலைமை வகித்தாா். மாவட்ட வணிகா் சங்கப் பேரமைப்பின் தலைவா் கு.சரவணன், மாவட்ட செயலாளா் கே.வேல்முருகன், நகரச் செயலாளா் பாஸ்கரன், பொருளாளா் பரத்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆற்காடு வட்டாட்சியா் எம்.கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீா் வழங்கினாா். இதில் நகராட்சி ஆணையா் (பொறுப்பு) சரவணபாபு, வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ்பாபுராஜ், வியாபாரிகள் கலந்துகொண்டனா்.

பின்னா் கரோனா தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஊா்வலம் அண்ணாசாலை திருவள்ளுவா் சிலை அருகிலிருந்து தொடங்கி பேருந்து நிலையம் காமராஜா் சிலை அருகில் நிறைவு பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.