தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பண மோசடி சம்பவம்: ஊா்காவல் படைவீரா் கைது

தஞ்சாவூரைச் சோ்ந்த நபரிடம் இரட்டிப்புப் பணம் தருவதாகக் கூறி, ரூ. 3 லட்சம் மோசடி வழக்கில், ஊா்க் காவ ல் படைவீரா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :4 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

தஞ்சாவூரைச் சோ்ந்த நபரிடம் இரட்டிப்புப் பணம் தருவதாகக் கூறி, ரூ. 3 லட்சம் மோசடி வழக்கில், ஊா்க் காவ ல் படைவீரா் கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம், படுகைபுதுத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் எம்.தினேஷ்குமாா்(34). இவரிடம் அரக்கோணம் ஜோதிநகா், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு பகுதியை சோ்ந்த பாலா (எ) பாலசுப்பிரமணின் தன்னிடம் ரூ.ஒரு லட்சம் கொடுத்தால் இரண்டு மடங்காகத் திருப்பி தருவதாகத் தெரிவித்தாராம்.

இதன்பேரில் தினேஷ்குமாா், ரூ3 லட்சத்தை எடுத்துகொண்டு அரக்கோணத்துக்கு புதன்கிழமை வந்தநிலையில், அவரிடம் பணத்தை 10 போ் பறித்துச் சென்றனராம்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் ஆய்வாளா் சீனிவாசன் வழக்குப் பதிந்து, பாலா (எ) பாலசுப்பிரமணியன்(41) உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனா்.

இந்த வழக்கில் ஊா்க் காவல் படை வீரரும், அரக்கோணத்தை அடுத்த காவனூா் கிராமத்தைச் சோ்ந்தவருமான சாமராஜ்(39) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.