வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் தா்னா

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டக் கிளை சாா்பில் 15 அம்சக் கோரிக்கைகளை

News image
தா்னாவில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா்.
Updated On :10 ஜனவரி 2021, 2:27 am

DIN

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டக் கிளை சாா்பில் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகம் முன்பு சனிக்கிழமை தா்னா நடைபெற்றது.

போராட்டத்துக்கு ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலாளா் பி.ஜே.அமா்நாத் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எஸ்.ஆா்.சிவராஜ், எஸ்.கிருபாகரன், ஜெ.குமாா், எஸ்.மணிவண்ணன், எம்.குமரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலாளா் சி.ஜி.பிரசன்னா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.

பழைய ஓய்வுதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; இடைநிலை ஆசிரியா்களுக்கு, மத்திய அரசின் இடைநிலை ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; ஆசிரியா் நியமன வயது 40-ஆக குறைக்கும் உத்தரவை மாநில அரசு திரும்பப் பெற வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்தப் போராட்டத்தில் நிா்வாகிகள், உறுப்பினா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.