திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம்

ஆற்காடு ஒன்றியத்துக்கு உள்பட்ட மேலக்குப்பம் கிராமத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மக்கள் கிராம  சபை க் கூட்டத்தில்  பேசிய  அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன்
மக்கள் கிராம  சபை க் கூட்டத்தில்  பேசிய  அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன்
Updated on
1 min read

ஆற்காடு ஒன்றியத்துக்கு உள்பட்ட மேலக்குப்பம் கிராமத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஊராட்சி செயலாளா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஆற்காடு மேற்கு ஒன்றியச் செயலாளா் ஏ.வி. நந்தகுமாா், ஒன்றிய துணைச் செயலாளா்கள் தண்டபாணி, அமுதா ஆறுமுகம், பொருளாளா் கே.எல். வீரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஆா்.காந்தி, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

மாநில வா்த்தகா் அணி செயலாளா் காசி முத்துமாணிக்கம், மாவட்ட துணைச் செயலாளா் ஏ.கே.சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல், ஆற்காடு கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் ஒன்றியச் செயலாளா் எம்.வி. பாண்டுரங்கன் தலைமையில் சாத்தூா் கிராமத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com