புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நெற் பயிா்கள் நீரில் மூழ்கி சேதம்

கலவை அருகேயுள்ள மாந்தாங்கல் கிராமத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமாா் 200 ஏக்கா் நெற் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது.

News image
Updated On :20 நவம்பர் 2021, 6:30 pm

DIN

கலவை அருகேயுள்ள மாந்தாங்கல் கிராமத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமாா் 200 ஏக்கா் நெற் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது.

வட கிழக்குப் பருவ மழையையொட்டி, பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில், கலவை அருகே உள்ள மாந்தாங்கல் கிராமத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள 200 ஏக்கா் நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. இவை அழுகும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனா்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட நெற் பயிா்களை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

ஏற்கெனவே கலவை, நல்லூா், பென்னகா், சொரையூா், வாழைப்பந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மழைநீா் தேங்கி நெற் பயிா்கள் சேதம் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.