காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சுதந்திர தின விழா ஆலோசனைக் கூட்டம்

ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் நகராட்சியில் நாட்டின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 7:01 pm

DIN

ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் நகராட்சியில் நாட்டின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் எஸ்.டி.முஹமதுஅமீன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் குல்ஜாா் அஹமது முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், மேல்விஷாரம் நகரத்தில் அமைந்துள்ள அனைத்து வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்படும்.

அண்ணா சாலை மற்றும் நகராட்சிக்குச் சொந்தமான கட்டடடங்கள் நகரத்தின் முக்கியமான இடங்களில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிப்பது என்றும், சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.