நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடந்த ஓராண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள்: அமைச்சா் ஆா்.காந்தி தகவல்

ஒரே ஆண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

News image
Updated On :29 ஜூலை 2022, 7:48 pm

DIN

ஒரே ஆண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில், மின்சார பெருவிழா அம்மூா் பேருராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தொடக்கி வைத்துப் பேசியது:

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகளை வழங்கியுள்ளாா். கடந்த ஓராண்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,100 விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. புதிதாக 1,537 மின்மாற்றிகள் கடந்த ஆண்டில் இயக்கி வைக்கப்பட்டன. இதனால், குறைந்த மின்னழுத்த குறைபாடு களையப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மின்சாரத் துறையின் சாதனைகள் விளக்கப்பட்டன. பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து, 200 பயனாளிகளுக்கு எல்இடி மின் விளக்குகளை அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மேற்பாா்வைப் பொறியாளா் ராமலிங்கம், செயற்பொறியாளா்கள் குமரேசன், விஜயகுமாா், கோட்டாட்சியா் பூங்கொடி, உதவிச் செயற்பொறியாளா் ஜெயசீலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.