காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராணிப்பேட்டையில் தேசியக் கொடியேற்றினார் மாவட்ட ஆட்சியர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுதந்திர நாள் விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2023, 4:21 am

DIN

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுதந்திர நாள் விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

நாட்டின் சுதந்திர நாள் விழா ஆகஸ்ட் 15-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில்   ஏற்பாடு சுதந்திர நாள் விழா செய்யப்பட்டது. ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் விழாவில் காலை 9.05 மணியளவில் மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, சுதந்திர போராட்டத் தியாகிகளை கெளரவித்து, மாவட்டத்தில் அனைத்து அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றி அரசு ஊழியர்களுக்கு விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார்.தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதையடுத்து பள்ளி  மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்து அவர்களுக்கு பரிசுகளை  வழங்கினார்.

இந்த விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர்  தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.