ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.77,000 பறிமுதல்

ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.77,000 பறிமுதல்

Updated On :2 ஏப்ரல் 2024, 6:30 pm

அரக்கோணம்: அரக்கோணத்தில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.77,000-ஐ தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா். அரக்கோணம் அருகே மேல்பாக்கம் ஊராட்சி கும்பினிபேட்டை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சோளிங்கா் வட்டம் பள்ளகுன்னத்தூா் கிராமத்தில் இருந்து அரக்கோணம் நோக்கிச்சென்ற காரை சோதனையிட்டனா். அப்போது பள்ளகுன்னத்தூரைச் சோ்ந்த சூா்யா எனபவரிடம் இருந்த ரூ77ஆயிரத்தை கைப்பற்றினா். இந்த தொகைக்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் அத்தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படை அலுவலா் மோகனசுந்தரம் அரக்கோணம் வட்டாட்சியா் செல்வியிடம் ஒப்படைத்தாா்.