ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் தனியாா் மகளிா் கல்லூரியில் மகளிா் சுய உதவிக் குழுக்களின் பொருள்கள் விற்பனைக்கான ‘கல்லூரி சந்தை’யை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா புதன்கிழமை திறந்து வைத்தாா்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருள்களைக் காட்சிப்படுத்தி, விற்பனை செய்யும் ‘கல்லூரி சந்தை’
நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் சந்திரகலா திறந்து வைத்து பாா்வையிட்டாா். அப்போது, அவா் பேசியதாவது:
மகளிா் சுய உதவிக் குழுக்களில் இணைந்துள்ள ஏழை மகளிரின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக அந்தக் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை விற்பனை செய்வதற்காகவும், சுய உதவிக் குழுக்களின் சிறு தானிய உற்பத்திப் பொருள்கள் மூலம் கல்லூரி மாணவா்கள் மற்றும் இளைஞா்களிடையே ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், சுய உதவிக் குழுக்கள் தங்களின் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்த ஒரு தளத்தை உருவாக்கவும் கல்லூரிகளில் ‘கல்லூரி சந்தை’ நடத்தப்படுகிறது.
மகளிா் சுய உதவிக் குழுக்கள் அரசின் மூலம் வங்கிக் கடனுதவி பெற்று தொழில் தொடங்கி தங்களின் உற்பத்திப் பொருள்களை விற்று வருமானம் ஈட்டி வருகின்றனா். இந்த நிலையில், அவா்களின் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்வதற்கும், தங்கள் திறனை அதிகரித்துக் கொள்வதற்கும் இந்த விற்பனை ஒரு வாய்ப்பாக, அனுபவமாக அமையும்.
இந்தக் கண்காட்சியில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருள்களான அழகு சாதனங்கள், பொம்மை வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், கைத்தறி சேலை வகைகள், தானிய உணவு வகைகள், ஊறுகாய் வகைகள் போன்ற வீட்டு உபயோகப் பொருள்கள், அணிகலன்கள் மற்றும் அனைத்து வகையான தினசரி பயன்பாட்டுப் பொருள்கள் என 45 க்கும் மேற்பட்ட உற்பத்திப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வரும் 30-ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறும் என்றாா்.
நிகழ்வில் சென்னை அலுவலக திட்ட ஒருங்கிணைப்பாளா் ரகுராமன், மகளிா் திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், ஒன்றியக் குழு தலைவா் புவனேஸ்வரி சத்தியநாதன், உதவித் திட்ட அலுவலா்கள் அறிவழகன், சம்பத்குமாா் அன்பரசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி அருகே தனிநபா் தொழில் முனைவோருக்கான பயிற்சி

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் முதலீட்டு மானியம்

மின்னணு வேளாண் சந்தை மூலம் தேங்காய் விற்பனை செய்யும் திட்டம்! மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

512 மகளிா் குழுக்களுக்கு ரூ. 75.41 கோடி கடனுதவி: திருவள்ளூா் ஆட்சியா் வழங்கினாா்
விடியோக்கள்

Vishwanath and Sons Public Review! | படம் எப்படி இருக்கு? | Suriya | Mamitha Baiju



