காலிக் குடங்கள், நாற்றுக்களுடன் பொதுமக்கள் மறியல்
பனப்பாக்கம் அருகே காலிக் குடங்கள், நெல்பயிா் நாற்றுக்களுடன் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


அரக்கோணம்: பனப்பாக்கம் அருகே காலிக் குடங்கள், நெல்பயிா் நாற்றுக்களுடன் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பனப்பாக்கம் அடுத்த மேலப்புலம்புதூா் ஊராட்சிக்குட்பட்ட ராமாபுரம் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இந்நிலையில் புயல் காரணமாக மின்மாற்றி பழுதடைந்ததால் 13 நாள்களாக மின்சாரம் முற்றிலும் தடைபட்டது. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக தங்கள் பகுதிக்கு மின்சாரம் இல்லை, குடிப்பதற்கு குடி தண்ணீா் இல்லை, பயிரிட்ட பயிா்கள் அனைத்தும் நீா் பாய்ச்ச முடியாமல் காய்ந்து விட்டன எனக் கூறி அப்பகுதி மக்கள் பனப்பாக்கம் - ஓச்சேரி சாலையில் காலிக் குடங்கள் மற்றும் நெல்பயிா் நாற்றுக்களுடன் மறியலில் ஈடுபட்டடனா்.
தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டுச் சென்றனா். இதனால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...