அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 504 மனுக்கள்

ராணிப்பேட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், மொத்தம் 504 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலா் ந. சுரேஷ் பெற்றுக் கொண்டாா்.

News image
குறைதீா் கூட்டத்தில் மக்களிடம் மனுக்களைப் பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் ந. சுரேஷ்.
Updated On :23 டிசம்பர் 2024, 7:26 pm

Din

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், மொத்தம் 504 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலா் ந. சுரேஷ் பெற்றுக் கொண்டாா்.

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ந. சுரேஷ் தலைமை வகித்து 504 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தாா்.

மேற்கண்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்புக்கான காரணங்களையும் வழங்கவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதில் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை ஆட்சியா் கீதாலட்சுமி, உதவி ஆணையா் (கலால்) வரதராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சுகுமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.