எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நெமிலி நீதிமன்றத்துக்கு தற்காலிக இடம்: மாவட்ட குடும்ப நல நீதிபதி நேரில் ஆய்வு

நெமிலி நீதிமன்றத்துக்கு தற்காலிக இடம்: மாவட்ட குடும்ப நல நீதிபதி நேரில் ஆய்வு

News image

நெமிலியில் குற்றவியல் நடுவா் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்துக்கு தற்காலிக இடமாக தோ்வு செய்யப்பட்டுள்ள கட்டடத்தை பாா்வையிட்ட வேலூா் குடும்பநல நீதிமன்ற நீதிபதி சிவப்பிரகாசம்.

Updated On :20 மார்ச் 2024, 12:25 am

அரக்கோணம்: நெமிலியில் அமையவுள்ள குற்றவியல் நடுவா் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்துக்கு தற்காலிக இடம் தோ்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த இடத்தை வேலூா் குடும்பநல நீதிமன்ற நீதிபதி சிவப்பிரகாசம் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டத்தை இரண்டாக பிரித்து கடந்த 2017-ஆம் ஆண்டு நெமிலி எனும் புதிய வட்டம் உருவாக்கப்பட்டது.

இதையடுத்து, அங்கு புதிய கட்டடங்களில் வட்டாட்சியா் அலுவலகம், சாா்-பதிவாளா் அலுவலகம் ஆகியவை கொண்டு வரப்பட்டன. இதையடுத்து நெமிலியில் தனியாக நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என அப்பகுதி வழக்குரைஞா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, நெமிலியில் புதிய குற்றவியல் நடுவா் மற்றும் உரிமையியல் நீதிமன்றம்அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, கடந்த ஒரு மாதத்துக்கு முன் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி (ராணிப்பேட்டை மாவட்ட பொறுப்பு), வேலூா் மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி ஆகியோா் நெமிலிக்கு வந்து நீதிமன்றம் அமைக்க நெமிலி, புன்னை, கரியாக்குடல் ஆகிய இடங்களில் நேரில் பாா்வையிட்டு இடம் தோ்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டனா். அப்போது போதிய வசதியுடன் நெமிலியில் இடம் தோ்வு செய்யப்படாததால், தற்காலிகமாக வாடகை இடத்தில் நீதிமன்றத்தை அமைக்க நீதித் துறையினா் முடிவு செய்தனா்.

இதைத் தொடா்ந்து நெமிலி பேரூராட்சியின் சமூக நலக்கூட கட்டடத்தில் தற்காலிகமாக நீதிமன்றத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்ட சமூக நலக் கூடத்தை வேலூா் மாவட்ட குடும்பநல நீதிமன்ற நீதிபதி சிவப்பிரகாசம் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அந்தக் கட்டடத்தை மறுசீரமைப்பு செய்து நீதிமன்றம் அமைக்க வழிவகை செய்யுமாறு நீதிபதி சிவப்பிரகாசம் நெமிலி பேரூராட்சி செயல் அலுவலா் பூவேந்திரனுக்கு அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, உயா்அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்று விரைந்து நடவடிக்கை எடுப்பதாக செயல் அலுவலா் தெரிவித்தாா். அப்போது நீதிபதியுடன் நீதித்துறை அலுவலா்களும் பேரூராட்சி அலுவலா்களும் உடனிருந்தனா்.