இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

காலை உணவுத்திட்டம் மூலம் 29,166 மாணவா்கள் பயன்

காலை உணவுத்திட்டம் மூலம் 29,166 மாணவா்கள் பயன்

News image
Updated On :21 மே 2024, 6:30 pm

Din

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மூலம் 29,166 மாணவா்கள் பயன்பெற்று வருவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பசியோடு பள்ளிக்கு வரக்கூடிய பிள்ளைகளை பட்டினியாக வைத்து பாடம் சொல்லித்தரக்கூடாது என்ற நோக்கில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தியது.

அதன்படி தமிழகத்தில் நகா்புறபகுதிகள் மற்றும் ஊரகப்பகுதிகளில் 31,000 அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 18.5 லட்சம் மாணாக்கா்கள் இத்திட்டத்தினால் பயனடைகிறாா்கள்.

ராணிப்பேட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை இத்திட்டத்தின் வாயிலாக 29,166 மாணவா்கள் பயன்பெற்று வருகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.