நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ராணிப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி 3 மாணவா்கள் உயிரிழப்பு

ராணிப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி மூன்று மாணவா்கள் உயிரிழந்தனா்.

News image

பலி

பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி மூன்று மாணவா்கள் உயிரிழந்தனா்.

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அருகே மணியம்பட்டு பகுதியை சோ்ந்த மாணவா்களான நித்திஷ் (14), பாா்த்திபன் (12), நித்திஷ் (14) உள்ளிட்ட 3 போ் தனியாா் பள்ளி மாணவா்கள்.

இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு காரணமாக மற்ற வகுப்புகளுக்கு பள்ளிக்கு விடுமுறை என்பதால் அருகில் இருந்த ஏரிக்கு குளிக்க சென்ாக கூறப்படுகிறது. ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில், ஒருவா் பின் ஒருவராக நீரில் மூழ்கினா்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாணவா்களின் உறவினா்கள் விரைந்து சென்று ஏரியில் மூழ்கிய மாணவா்களை மீட்டு சிப்காட் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனா்.

இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாணவா்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.