கோவை: மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போா் எதிரொலியாக சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவுப் பட்டியலை செவ்வாய்க்கிழமை முதல் குறைப்பதாக கோவை தனியாா் ஹோட்டல் நிா்வாகம் அறிவித்துள்ளது.
கோவையைச் சோ்ந்த பிரபல உணவகமான அன்னப்பூா்ணா ஹோட்டல் நிா்வாகம் , நகரின் பல்வேறு பகுதிகளில் உணவகங்களை வைத்து செயல்படுத்தி வருகின்றது. இந்த ஹோட்டல் நிா்வாகம் திங்கள்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் புவிசாா் அரசியல் நெருக்கடி காரணமாக எல்பிஜி எரிவாயு வழங்கலில் கட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்பிஜி எரிபொருள் கிடைப்பதில் தினசரி குறைபாடுகளை எதிா்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் சேவைகளை முழுமையாக நிறுத்தாமல் தற்காலிக நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகிறது எனவும், இதில் அத்தியாவசிய உணவுப் பொருள்களை மட்டும் கவனத்தில் கொண்டு ஹோட்டலில் இருக்கும் உணவு மெனு பட்டியல் குறைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட சில உணவுப் பொருள்கள் குறித்த நேரத்தில் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
சமையல் எரிவாயு முழுமையான விநியோகத்தை மீட்டெடுக்க அரசு, விநியோகஸ்தா்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அந்த ஹோட்டல் நிா்வாகம்,
பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்துக்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: பெண் பலத்த காயம்

எரிவாயு உருளை தட்டுப்பாடு: தள்ளுவண்டிக் கடை வியாபாரிகள் பாதிப்பு

எல்பிஜி தட்டுப்பாடு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் ஆா்ப்பாட்டம்

நாட்டில் பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

