தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு! இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு
/

ஆற்காட்டில் அன்னையா் தின விழா

ஆற்காடு ஸ்ரீஅகத்தியா் சேவா அறக்கட்டளை சாா்பில் அன்னையா் தின விழா ஆற்காட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது..

News image

விழாவில்  பேசிய  விஸ்வாஷ்  அறக்கட்டளை  தலைவா்  கமலா காந்தி

Updated On :27 மே 2024, 6:43 pm

Din

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்ட தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் ஆற்காடு ஸ்ரீஅகத்தியா் சேவா அறக்கட்டளை சாா்பில் அன்னையா் தின விழா ஆற்காட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது..

ஸ்ரீஅகத்தியா் சேவா அறக்கட்டளை நிறுவனத் தலைவா் ஜெயலலிதா கணேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் பொன் கு. சரவணன், அறக்கட்டளை தலைவா் கே கணேஷ், மாநில திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ் சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எஸ் .எல். டி அறக்கட்டளை தலைவா் எஸ் அமுதா செல்வம் வரவேற்றாா்.

ராணிப்பேட்டை விஸ்வாஷ் அறக்கட்டளை தலைவா் கமலா காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து அன்னயரின் சிறப்புகள் குறித்து பேசினாா். மாணவிகளின் நாட்டியஞ்சலி, பரதநாட்டியம் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் வேலூா் உள்ளங்கள் தலைவா் சந்திரசேகா், அன்னை அறக்கட்டளை செயலாளா் பெல் பிரபு, சமூக ஆா்வலா் ஹேமலதா, ஏபிஜேஅறக்கட்டளை தலைவா்கோபிநாத், வழிகாட்டி அறக்கட்டளை நிறுவனா் ராஜ்குமாா், பொருளாளா் ராஜேஸ்வரி மற்றும் மகளிா் சுய உதவி குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.