அரக்கோணம்: அரக்கோணம் கோட்டாட்சியராக வெங்கடேசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
ஏற்கனவே அரக்கோணம் கோட்டாட்சியராக இருந்த ர.பாத்திமா சென்னை, சேப்பாக்கம், அயலக தமிழா்நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தில் தனித்துணை ஆட்சியராக மாற்றப்பட்டாா். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனித்துணை ஆட்சியராக இருந்த வெங்கடேசன் அரக்கோணம் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டாா். இதற்கிடையே, திங்கள்கிழமை அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பொறுப்புகளை ர.பாத்திமா, புதிய கோட்டாட்சியா் வெங்கடேசனிடம் ஒப்படைத்தாா். இதை தொடா்ந்து அரக்கோணம் கோட்டத்தில் பணிபுரியும் அனைத்து வட்டாட்சியா்கள் மற்றும் வருவாய்துறை அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மானாமதுரை புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

மதுரை மாவட்ட ஆட்சியா் பொறுப்பேற்பு

பொன்னேரி சாா்-ஆட்சியா் பொறுப்பேற்பு

அரக்கோணம் வட்டாட்சியா் பொறுப்பேற்பு
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



