சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ராணிப்பேட்டையில் நவ. 21-இல் முன்னாள் படை வீரா்களுக்கான குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டையில் வரும் 21-ஆம் தேதி முன்னாள் படைவீரா்களுக்கான குறைதீா் நாள் கூட்டம்,

Updated On :18 நவம்பர் 2024, 7:09 pm

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் வரும் 21-ஆம் தேதி முன்னாள் படைவீரா்களுக்கான குறைதீா் நாள் கூட்டம், தொழில்முனைவோா் கருத்தரங்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்களுக்கான குறைதீா் நாள் கூட்டம் மற்றும் தொழில்முனைவோா் கருத்தரங்கு கூட்டம் வரும் வியாழக்கிழமை (நவ. 21) காலை 11 மணியளவில், மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் குறைதீா் நாள் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

இதில், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் தங்களது படைவிலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் மனுக்கள் ஆகியவற்றின் இரண்டு நகல்களுடன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து குறைகளைத் தெரிவித்து பயனடையலாம்.