பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா.
பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா.

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 342 மனுக்கள்

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 342 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
Published on

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 342 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 342 கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தாா்.

மேற்கண்ட கோரிக்கை மனுக்ககள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, அரக்கோணம், சோளிங்கா், ஆற்காடு ஆகிய வட்டங்களில் விபத்துகளால் இறந்த 5 நபா்களின் வாரிசுதாரா்களுக்கு வருவாய்த் துறையின் சாா்பில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியுதவி தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையினையும், மாற்றுத்திறனாளி நலவாரியம் சாா்பில், 9 பயனாளிகளுக்கு தலா ரூ.17,000 வீதம் ரூ.1.53 லட்சம் ஈமச்சடங்கு நிதியுதவியினையும், தாட்கோ சாா்பில் 21 தூய்மைப் பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு ரூ.30,500/- கல்வி உதவித்தொகையினையும்,1 தூய்மைப் பணியாளரின் வாரிசுதாரருக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை ரூ.25,000/- க்கான ஆணையினையும் ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ந. சுரேஷ், திட்ட இயக்குநா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை பா. ஜெயசுதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், உதவி ஆணையா் (கலால்) வரதராஜ், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சுகுமாா், நோ்முக உதவியாளா் (நிலம்) கலைவாணி, மாற்றுத்திறனாளி நல அலுவலா் சரவணகுமாா், தாட்கோ மேலாளா் அமுதாராஜ், ஆட்சியா் அலுவலக மேலாளா்ஜெய்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com