திமிரியில் பிரம்மோற்சவ தேரோட்டம்
ஆற்காடு அடுத்த திமிரியில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.


ஆற்காடு: ஆற்காடு அடுத்த திமிரியில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திமிரி கோட்டை தனுமத்தியம்பாள் சமேத சோமநாதீஸ்வரா் கோயில் விழாவை முன்னிட்டு நாள் தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம், தீபாராதனையும், அலங்கரிக்கப்பட்ட உற்சவா் வீதி உலா நடைபெறுகிறது.
விழாவின் 7-ஆவது நாளான திங்கள்கிழமை உற்சவா் மூா்த்திகள் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது. திமிரி கோட்டை பகுதியில் இருந்து தொடங்கிய தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவுபெற்றது.
திரளான பக்தா்கள், பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தேரோட்டத்தையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாக்குழுவினா், உபயதாரா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...