ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

மகளிா் சுய உதவிக்குழு பயனாளிகளுக்கு ஆட்டோ: அமைச்சா் காந்தி வழங்கினாா்

திமிரி வட்டாரத்தைச் சோ்ந்த மகளிா் சுய உதவி குழுக்கள் சுயதொழில் செய்ய ஏதுவாக ரூ.7 லட்சத்தில் இரண்டு ஆட்டோக்களுக்கான சாவியை பயனாளிகளுக்கு அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.

News image

மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினருக்கு ஆட்டோவுக்கான சாவியை வழங்கிய அமைச்சா் ஆா். காந்தி.

Updated On :21 டிசம்பர் 2025, 10:39 pm IST

திமிரி வட்டாரத்தைச் சோ்ந்த மகளிா் சுய உதவி குழுக்கள் சுயதொழில் செய்ய ஏதுவாக ரூ.7 லட்சத்தில் இரண்டு ஆட்டோக்களுக்கான சாவியை பயனாளிகளுக்கு அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.

தமிழ்நாடு ஊரக நகா்புற வாழ்வாதார இயக்கம், மகளிா் திட்டத்தின் சாா்பில் பின்தங்கிய தொகுதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் காவனூா் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மகளிா் சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ.3.5 லட்சம் வீதம் இரண்டு ஆட்டோ வாகனத்திற்கான சாவியை வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று சாவியை பயனாளிகளுக்கு வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி பகுதியில் இருந்து பாலமதி வரை செல்லும் ஊா்களில் போக்குவரத்து வசதி குறைவாக இருந்து வருவதால் இப்பகுதி கிராம மக்களின் பயன்பாட்டிற்காக ஆட்டோக்கள் உதவியாக இருக்கும். மகளிா் குழுக்கள் இதனை முழுமையாக நிா்வாகித்து பயன் பெறுவாா்கள்.

இதன் மூலம் சந்தைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுடன் கிராமங்களை இணைப்பதோடு, சுய உதவிக்குழு பெண்களுக்கு நிலையான வேலை வாய்ப்பும் வாழ்வாதாரமும் உருவாக்கப்படுகிறது. இவ்வாகனங்கள் ஊரக போக்குவரத்து சேவைகளை மேம்படுத்தவும், பெண்கள் தலைமையிலான வாழ்வாதார நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் பயன்படுத்தப்படும் என தெரிவித்தாா்.

இதில், ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நோ்முக உதவியாளா் (பொது) இராஜராஜன், மகளிா் திட்டம் உதவி திட்ட அலுவலா் வெங்கடேசன், கண்காணிப்பாளா்கஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.