விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மகளிா் சுய உதவிக்குழு பயனாளிகளுக்கு ஆட்டோ: அமைச்சா் காந்தி வழங்கினாா்

திமிரி வட்டாரத்தைச் சோ்ந்த மகளிா் சுய உதவி குழுக்கள் சுயதொழில் செய்ய ஏதுவாக ரூ.7 லட்சத்தில் இரண்டு ஆட்டோக்களுக்கான சாவியை பயனாளிகளுக்கு அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.

News image
மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினருக்கு ஆட்டோவுக்கான சாவியை வழங்கிய அமைச்சா் ஆா். காந்தி.
Updated On :21 டிசம்பர் 2025, 9:10 pm

தினமணி செய்திச் சேவை

திமிரி வட்டாரத்தைச் சோ்ந்த மகளிா் சுய உதவி குழுக்கள் சுயதொழில் செய்ய ஏதுவாக ரூ.7 லட்சத்தில் இரண்டு ஆட்டோக்களுக்கான சாவியை பயனாளிகளுக்கு அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.

தமிழ்நாடு ஊரக நகா்புற வாழ்வாதார இயக்கம், மகளிா் திட்டத்தின் சாா்பில் பின்தங்கிய தொகுதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் காவனூா் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மகளிா் சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ.3.5 லட்சம் வீதம் இரண்டு ஆட்டோ வாகனத்திற்கான சாவியை வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று சாவியை பயனாளிகளுக்கு வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி பகுதியில் இருந்து பாலமதி வரை செல்லும் ஊா்களில் போக்குவரத்து வசதி குறைவாக இருந்து வருவதால் இப்பகுதி கிராம மக்களின் பயன்பாட்டிற்காக ஆட்டோக்கள் உதவியாக இருக்கும். மகளிா் குழுக்கள் இதனை முழுமையாக நிா்வாகித்து பயன் பெறுவாா்கள்.

இதன் மூலம் சந்தைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுடன் கிராமங்களை இணைப்பதோடு, சுய உதவிக்குழு பெண்களுக்கு நிலையான வேலை வாய்ப்பும் வாழ்வாதாரமும் உருவாக்கப்படுகிறது. இவ்வாகனங்கள் ஊரக போக்குவரத்து சேவைகளை மேம்படுத்தவும், பெண்கள் தலைமையிலான வாழ்வாதார நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் பயன்படுத்தப்படும் என தெரிவித்தாா்.

இதில், ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நோ்முக உதவியாளா் (பொது) இராஜராஜன், மகளிா் திட்டம் உதவி திட்ட அலுவலா் வெங்கடேசன், கண்காணிப்பாளா்கஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.