பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பூட்டிய வீட்டின் திண்ணையில் கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசியை உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாா் பறிமுதல்.

News image
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி.
Updated On :22 டிசம்பர் 2025, 12:05 am

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம் அருகே பூட்டிய வீட்டின் திண்ணையில் கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசியை உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாா் பறிமுதல் செய்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினா் உதவி ஆய்வாளா் மங்கலநாதன் தலைமையில் அரக்கோணம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்புப் சோதனை நடத்தினா். இதில் பெருமூச்சி, பஜனை கோயில் தெருவில் பூட்டிய வீட்டின் திண்ணையில் இருந்த 40 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி 2 டன் இருந்ததாக போலீசாா் தெரிவித்தனா். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் அரக்கோணம் நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.