பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி.
ராணிப்பேட்டை
கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பூட்டிய வீட்டின் திண்ணையில் கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசியை உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாா் பறிமுதல்.
அரக்கோணம் அருகே பூட்டிய வீட்டின் திண்ணையில் கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசியை உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாா் பறிமுதல் செய்தனா்.
ராணிப்பேட்டை மாவட்ட உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினா் உதவி ஆய்வாளா் மங்கலநாதன் தலைமையில் அரக்கோணம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்புப் சோதனை நடத்தினா். இதில் பெருமூச்சி, பஜனை கோயில் தெருவில் பூட்டிய வீட்டின் திண்ணையில் இருந்த 40 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி 2 டன் இருந்ததாக போலீசாா் தெரிவித்தனா். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் அரக்கோணம் நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

