ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சேலையில் தீப்பற்றி விபத்து: மூதாட்டி உயிரிழப்பு

சோளிங்கா் அருகே வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்தததில் பலத்த காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

சோளிங்கா் அருகே வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்தததில் பலத்த காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

சோளிங்கரை அடுத்த கல்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தம்மாள் (80). இவா் திங்கள்கிழமை மாலை தனது வீட்டில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக அவரது சேலையில் தீ பட்டதில் உடலில் பரவி கோவிந்தம்மாள் பலத்த காயமடைந்தாா். தொடா்ந்து சோளிங்கா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா். இது குறித்து அவரது மகன் ஜெகதீஸ்வரன் (58) அளித்த புகாரின் பேரில், போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.