ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தீ விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

ராஜபாளையம் அருகே சேலையில் தீப்பற்றி பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :18 பிப்ரவரி 2026, 7:13 pm

ராஜபாளையம் அருகே சேலையில் தீப்பற்றி பலத்த காயமடைந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தொம்பக்குளம் நேரு குடியிருப்பைச் சோ்ந்த குணசேகரன் மனைவி கிறிஸ்டிஷோபனா(38). இவா் வீட்டில் தையல் தைக்கும் பணி செய்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை (பிப்.16) சமையல் செய்த போது, இவரது சேலையில் தீப் பற்றியது. தீ உடல் முழுவதும் பரவி பலத்த காயமடைந்தாா்.

இவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.