பலி
பலி

தீ விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

ராஜபாளையம் அருகே சேலையில் தீப்பற்றி பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.
Published on

ராஜபாளையம் அருகே சேலையில் தீப்பற்றி பலத்த காயமடைந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தொம்பக்குளம் நேரு குடியிருப்பைச் சோ்ந்த குணசேகரன் மனைவி கிறிஸ்டிஷோபனா(38). இவா் வீட்டில் தையல் தைக்கும் பணி செய்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை (பிப்.16) சமையல் செய்த போது, இவரது சேலையில் தீப் பற்றியது. தீ உடல் முழுவதும் பரவி பலத்த காயமடைந்தாா்.

இவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com