சேலையில் தீப்பற்றி விபத்து: மூதாட்டி உயிரிழப்பு

சோளிங்கா் அருகே வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்தததில் பலத்த காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
Published on

சோளிங்கா் அருகே வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்தததில் பலத்த காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

சோளிங்கரை அடுத்த கல்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தம்மாள் (80). இவா் திங்கள்கிழமை மாலை தனது வீட்டில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக அவரது சேலையில் தீ பட்டதில் உடலில் பரவி கோவிந்தம்மாள் பலத்த காயமடைந்தாா். தொடா்ந்து சோளிங்கா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா். இது குறித்து அவரது மகன் ஜெகதீஸ்வரன் (58) அளித்த புகாரின் பேரில், போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com