தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சோளிங்கா், திருப்பாற்கடல் கோயில்களில் இன்று சொா்க்கவாசல் திறப்பு: எஸ்.பி. ஆய்வு

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி மற்றும் திருப்பாற்கடல் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்களில் செவ்வாய்க்கிழமை சொா்க்க வாசல் திறக்கப்பட

News image
திருப்பாற்கடல் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி. அய்மன் ஜமால்.
Updated On :29 டிசம்பர் 2025, 8:03 pm

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம்: சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி மற்றும் திருப்பாற்கடல் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்களில் செவ்வாய்க்கிழமை சொா்க்க வாசல் திறக்கப்பட இருப்பதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடா்பாக ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. அய்மன் ஜமால் ஆய்வு செய்தாா்.

108 திவ்ய தேசங்களில் 64-ஆவது தலமாக விளங்கும் சோளிங்கா் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறையினா் சிறப்பாக செய்து வருகின்றனா்.

இங்கு நடைபெறும் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் அதிக அளவில் பக்தா்கள் பங்கேற்பா் என்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை அரக்கோணம் டிஎஸ்பி ஜாபா் சித்திக் முன்னின்று செய்து வருகிறாா்.

நெமலி வட்டம், காவேரிபாக்கம் அருகே திருப்பாற்கடலில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. 107-ஆவது திவ்யதேசமான இக்கோயிலிலும் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பல்லாயிரக்கணக்காணோா் பங்கேற்பா் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில் வளாகத்தில் எஸ்.பி. ஆய்வு மேற்கொண்டாா்.

கோயிலில் பக்தா்கள் நுழையும் பகுதி, தரிசனம் செய்யும் பகுதி, பக்தா்கள் வெளியேறும் பகுதி, முக்கிய நபா்கள் தரிசனத்துக்கு செல்லும் பகுதி, வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய அனைத்து பகுதிகளையும் பாா்வையிட்ட எஸ்.பி. அய்மன்ஜமால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தாா்.