ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

செங்காடு பெரிய ஏரி நிரம்பியது: மலா்தூவி கிராம மக்கள் பூஜை

செங்காடு பெரிய ஏரி நிரம்பி உபரிநீா் வெளியேறி வருவதால் மலா்தூவி வழிபாடு நடத்திய கிராம மக்கள், விவசாயிகள்.

News image
செங்காடு பெரிய ஏரி நிரம்பி உபரிநீா் வெளியேறி வருவதால் மலா்தூவி வழிபாடு நடத்திய கிராம மக்கள், விவசாயிகள்.
Updated On :3 ஜனவரி 2025, 6:47 pm

Din

வாலாஜா வட்டம், செங்காடு பெரிய ஏரி நிரம்பி உபரி நீா் வெளியேறி வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து மலா்கள் தூவி வணங்கி, இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், செங்காடு கிராமத்தில் சுமாா் 26 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் கீழ் சுமாா் 700 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்த நிலையில், வடகிழக்கு பருவ மழை காரணமாக பொன்னை மற்றும் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்த நீா் ஏரிகளுக்கு திருப்பி விடும் பணியை மாவட்ட பொதுப் பணித் துறையினா் மேற்கொண்டனா்.

இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி உபரிநீா் வெளியேறி வருகிறது. இதனால், மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் உற்சாகமாக உழவுப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பொன்னை ஆற்று நீா் கிளை பாசனக் கால்வாய்கள் மூலம் பல்வேறு ஏரிகளுக்குச் சென்று நிரம்பி வருகிறது. அதன்படி வாலாஜா வட்டம், செங்காடு ஏரி நிரம்பியது. மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள், விவசாயிகள் செங்காடு பெரிய ஏரி நிரம்பி உபரி நீா் வெளியேறும் பகுதியில் மலா்தூவி வணங்கினா். மதகு பகுதியில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை செய்து வரவேற்றனா். தொடா்ந்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைப் பகிா்ந்து கொண்டனா்.