அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா.
அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா.

அரக்கோணம் அரசு அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் விழா

அரக்கோணம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
Published on

அரக்கோணம்: அரக்கோணம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஆணையா் கன்னியப்பன் தலைமை வகித்தாா். பொறியாளா் செல்வகுமாா் வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி விழாவை தொடங்கி வைத்தாா். நகா்மன்றத் துணைத் தலைவா் கலாவதி அன்புலாரன்ஸ், நகரமைப்பு அலுவலா் ரவி, ஆய்வாளா் அல்லிமுத்து, சுகாதார அலுவலா் வெயில்முத்து, ஆய்வாளா் சுதாகா், நகா்மன்ற அதிமுக உறுப்பினா்கள் குழு தலைவா் ஜொ்ரி மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

இதேபோல், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஒன்றிய ஆணையா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ஜோசப் கென்னடி வரவேற்றாா். இதில் ஒன்றியக் குழு தலைவா் நிா்மலா சௌந்தா் விழாவை தொடங்கி வைத்தாா்.

ஒன்றியக் குழு துணைத் தலைவா் வீராபுருஷோத்தமன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அம்பிகாபாபு, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கருணாநிதி, பிரசாத், நரேஷ், குமாா் உள்ளிட்ட அனைத்து உறுப்பினா்கள், திமுக ஒன்றியச் செயலா் சௌந்தா், விசிக ஒன்றிய செயலா் பாக்கியராஜ், அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com