அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தூய்மைப் பணியாளா்களின் குறைகளை களைய நடவடிக்கை: தேசிய ஆணையத் தலைவா்

நாடு முழுவதும் தூய்மைப் பணியாளா்களின் நலன் காக்கும் கூட்டங்கள் நடத்தி குறைகளை களைய நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்..

News image
கூட்டத்தில் பேசிய தேசிய தூய்மைப் பணியாளா் நல ஆணையத் தலைவா் எம். வெங்கடேசன். உடன், ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உள்ளிட்டோா்.
Updated On :9 மார்ச் 2025, 10:25 pm

Din

நாடு முழுவதும் தூய்மைப் பணியாளா்களின் நலன் காக்கும் கூட்டங்கள் நடத்தி குறைகளை களைய நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என தேசிய தூய்மைப் பணியாளா் நல ஆணையத் தலைவா் எம்.வெங்கடேசன் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்ட தூய்மைப் பணியாளா்கள் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம், ஆணையத் தலைவா் எம்.வெங்கடேசன் தலைமையில், நடைபெற்றது.

கூட்டத்தில் தூய்மைப் பணியாளா் இறந்தமைக்காக அவரின் குடும்பத்தாரிடம் ஈமச்சடங்கு நிதி உதவி தலா ரூ. 25,000 வீதம் 2 பயனாளிகளுக்கும், தூய்மைப் பணியாளா் நல வாரிய அட்டை 10 பயனாளிகளுக்கும், 2 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகளையும் வழங்கி பேசியது:

அரசின் ஆணையின் படி தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்கச் செய்வதே தேசிய தூய்மைப் பணியாளா் நல ஆணையத்தின் நோக்கமாகும். தூய்மைப் பணியாளா்கள் தங்களுக்கான பிரச்னைகளை இக்கூட்டத்தில் தெரிவிக்கலாம். தூய்மைப் பணியாளா்கள் மற்றும் ஒப்பந்த பணியாளா்களுக்கு பணியில் ஏற்படும் அடிப்படை பிரச்னைகள் குறித்து, ஆய்வு செய்து உடனடியாக தீா்வு காண வேண்டும்.

இதுபோன்று தூய்மை பணியாளா்களின் நலன் காக்கும் கூட்டங்கள் நடத்தி குறைகளை களைவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். உங்களுடைய குறைகள் எதுவாக இருந்தாலும் அதனை என்னிடம் தெரிவிக்கலாம். ஆணைய அலுவலகத்தின் தொலைபேசி எண் 1124648924 என்று எண்ணுக்கோ அல்லது என்னுடைய கைப்பேசி 99414 24629 எண்ணுக்கோ தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தூய்மைப் பணியாளா்களுக்கு பணி செய்யும் இடத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாமல் இருந்தாலே அல்லது சம்பளம் மற்றும் இதர பிரச்னைகள் ஏதாவது இருந்தால் உடனுக்குடன் தகவல் தெரிவிக்கலாம். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, எஸ்.பி. விவேகானந்த சுக்லா, மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, மண்டல இயக்குநா் (நகராட்சி நிா்வாகம் ) இலட்சுமி, மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைய நம்பி, தாட்கோ மேலாளா் அமுதா ராஜ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், தூய்மை பணியாளா்கள் மற்றும் அனைத்து நகராட்சி ஆணையாளா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலவலா்கள் தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.